பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை தாய்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான பிரிட்டிஷ் பெண் நிஷிகா சமரதுங்கா தனது இரண்டு இளம் மகன்களான ஐந்து வயது பிளெய்ன் மற்றும் மூன்று வயது நத்தானியேலுடன் பிரித்தானியாவில் காணாமல் போன சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி மார்ச் 29 முதல் அவர் குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலராடோ நீதிமன்றத்தின் உத்தரவின்படி குழந்தைகளை அவர்களது அமெரிக்கத் தந்தை பென் பேயரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும் அதனை நிஷிகா நிறைவேற்றத் தவறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. […]
