ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லை
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Tohoku Region பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்ட போதிலும் தற்போது வரை பெரும் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை […]
