முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவு வவுனியாவில் அனுஷ்டிப்பு
முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்,வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது. இதனுடன் இணைந்த வகையில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இடம்பெற்றது. கூட்டத்தின் போது எதிர்வரும் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக […]
