அரச திணைக்களங்களே சட்ட மீறலில் முன்னிலை
அரச திணைக்களங்களே அதிகளவில் உள்ளூராட்சி சட்டங்களை மீறுவதாகவும் அரச நிதியில் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களில் சுமார் 90 வீதமானவை உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட அனுமதியைப் பெறாமல் அமைக்கப்படுவதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கு வியாபார உரிமம் வழங்கப்பட வேண்டுமாயின் குடிபுகு சான்றிதழ் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலை வரவேற்றார். […]
