பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவிலும் போராட்டம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியாவில் இன்று (08) கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போராட்டம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமானது. இதில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் பழைய […]
