முதியோர் இல்ல தீ விபத்து 11 பேர் மாயம்
முதியோர் இல்ல தீ விபத்து 11 பேர் மாயம் என்ற அதிர்ச்சி சம்பவம் ஹொரணை அங்குருவத்தோட்ட பகுதியில் நேற்று மாலை பதிவாகியுள்ளது. முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தையடுத்து 11 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் 55 பேர் வரை காயங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுடன் ஹொரணை மற்றும் கல்பாத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அவசர மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]
