கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி நகரைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (23) என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். தொழிலகத்தில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து […]
