ஈரான் முகவருக்கு வீடியோ அனுப்பிய இஸ்ரேல் வீரர், ஈரானுடன் நடைபெற்ற 12 நாள் போரின் போது ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகளின் வீடியோக்களை ஈரான் முகவருக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் செயலில் இருந்த ஒரு வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் ஜூலை 15 அன்று அறிவித்துள்ளது.
இராணுவத்தின் தகவலின்படி ஈரான் முகவருக்கு வீடியோ அனுப்பிய இஸ்ரேல் வீரர் பொதுமக்கள் இருந்த இடங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட இரண்டு ஏவுகணை தடுப்பு (missile interception) வீடியோக்களை ஈரான் முகவருக்கு அனுப்பியதுடன் மேலும் பல பொதுமக்கள் பகுதிகளில் எடுக்கப்பட்ட காணொளிகளையும் பகிர்ந்துள்ளார். இதற்காக அவர் பணமும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சமூக ஊடகமான Telegram வழியாக பணம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் ஈரான் தொடர்புடைய நபர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தனது இராணுவப் பொறுப்பின் மூலம் பெற்ற ரகசிய ஆவணங்கள் அல்லது உள்துறை தகவல்களை பகிரவில்லை என்று நீதிமன்றம் கருத்தில் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்து அவரது இராணுவ பதவியையும் தாழ்த்தியுள்ளது. இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளிநாட்டு முகவர்களுடன் பகிர்வது கடுமையான குற்றமாக கருதப்படும் என்பதை மீண்டும் எடுத்துக்காட்டுவதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













Leave a Reply