ஹொரணை மருத்துவமனை மத்திய அரசின் கீழ்
மேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் மத்திய அரசின் நிர்வாகத்திற்கு மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதுடன் இதற்கு மேல் மாகாண ஆளுநரின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது. ஆதார வைத்தியசாலையாக இயங்கி வந்த ஹொரணை மருத்துவமனை கடந்த 2022 ஜூன் 3ஆம் திகதி மாவட்ட பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தது. […]
