புதிய சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில நிபந்தனைகள் அரசாங்கப் பரீட்சைகளின் இரகசியத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி தேவையான திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் சி.பி. இலங்கசிங்க தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் சுற்றறிக்கையின் 7.5ஆம் இலக்கத்தின் கீழ் பல்கலைக்கழக […]
