ஹிஜாப் விவகாரத்தில் உரிமை மீறல்
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை முடிவுகள் அவர்கள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோன்றியதாகக் கூறி இடைநிறுத்தப்பட்ட சம்பவத்தில் மாணவிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவிகளின் மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சட்டத்தின் முன் […]
