மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அபிவிருத்தியா? பூநகரி கிராஞ்சியில் மாபெரும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் பூர்வீக நிலங்களையும் பாதிக்கும் அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் மக்கள் போராட்டமும் முன்னெடுத்துள்ளனர். ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வேரவில் […]
