யானைக்குட்டி உயிரிழப்பு ஒக்கம்பிட்டியாவில் சோகம்
ஒக்கம்பிட்டிய பகுதியில் காட்டு யானைக்குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.வனவிலங்கு திணைக்களத்தின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி விவசாய நிலம் ஒன்றை பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பி வேலியைத் தொட்டதன் காரணமாக இந்த யானைக்குட்டி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த யானைக்குட்டியின் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்தும் […]
