கபில மர்ம மரணம் நீதிமன்றம் அவசர உத்தரவு
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் தொடர்பான விசாரணை 76 நாட்கள் கடந்தும் முக்கிய முன்னேற்றமின்றி இருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைபேசியின் பாதுகாப்பு பூட்டை (Lock) இன்னும் திறக்க முடியாததால் தடயவியல் பரிசோதனைக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD) நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த […]
