வடக்கில் குளங்கள் தூர்வாரும் பணி துரிதம்
வடக்கு மாகாணத்தில் தூர்வாரப்பட வேண்டிய குளங்களை அடையாளம் கண்டு அவற்றின் புனரமைப்பு மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாரி அந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் திட்டத்தின் சாதகமான விளைவுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் […]
