சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை – ஸ்பெயின் பிரதமர் சாஞ்செஸின் உறுதியான நிலைப்பாடு
ஸ்பெயினில் சட்டபூர்வ ஆவணங்கள் இல்லாமல் வாழும் குடியேறிகள் மற்றும் அகதி கோரியவர்களில் சுமார் 5 லட்சம் பேருக்கு சட்டபூர்வ தங்கும் உரிமை வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து வரும் விமர்சனங்களுக்கு பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் உறுதியான பதில் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான 46 விநாடி காணொளியில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், நாம் எல்லையை மீறிவிட்டோம், உலகின் ஓட்டத்திற்கு எதிராகச் செல்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் மனித உரிமைகளை அங்கீகரிப்பது எப்போது தீவிரவாதமாக மாறியது? கருணை […]
