அத்தனகலு ஓயா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை தாழ்வான பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்ப்பாசன துறை வெளியிட்ட தகவலின்படி இன்று காலை 6 மணி நிலவரப்படி பல நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
