ஆற்றில் மூழ்கி மாணவன் சடலமாக மீட்பு
கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் ஆக்ரா ஓயா ஆற்றில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயது பாடசாலை மாணவன் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவன் லிந்துலை பாடசாலையில் கல்வி கற்று வந்த மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நண்பர்களுடன் மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றிருந்தபோது தவறி நீரில் விழுந்து காணாமல் போனதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை […]
