2,000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து தங்க மோதிரம் கண்டுபிடிப்பு
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு தென்மேற்கே அமைந்துள்ள டான் யாய் தாங் கிராமத்தில் உள்ள நெல்வயலில் கிடைத்த தொன்மையான பொருட்களைத் தொடர்ந்து அந்நாட்டு அரசின் தொல்லியல் துறையான Fine Arts Department தீவிர அகழாய்வை முன்னெடுத்தது. வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தத் […]
