யாழ் பயணத்தில் திடீர் சிக்கல் – தொடருந்து நிறுத்தம்
யாழ் தொடருந்து நிறுத்தம், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினம் என்பதால் குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த யாழ்தேவி விரைவு தொடருந்தில் காங்கேசன்துறை நோக்கிச் […]
