நீர்கொழும்பு சிறைக் கலவரம் இந்தியர் ஒருவரும் பலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவத்தில் இந்தியப் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிறையில் கைதியாக இருந்த 73 வயதுடைய எஸ். உன்னிகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் ஏற்கனவே 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பான தகவல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வன்முறையைத் […]
