முதியவரை தாக்கிய மர்மநபர்கள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை இரு மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து வழி கேட்பது போல் நடித்து அவருடன் உரையாடியுள்ளனர். பின்னர் திடீரென முதியவரை தாக்கி அவர் வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த […]
