மோட்டார் சைக்கிள் வாங்குவதாக நடித்து திருடிய நூதன மோசடி
மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவது போல் நடித்து அவற்றை சோதனை ஓட்டம் செய்வதாகக் கூறி திருடிச் சென்ற நூதன மோசடியில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் முதலில் காத்தான்குடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்குச் சென்று வாகனத்தை வாங்குவதாகக் கூறி சோதனை […]
