இந்த போராட்டம் நேற்று (24) கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூ.25,000 நிவாரணத் தொகை, பாதிக்கப்படாத சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இதுவரை அந்த நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
மேலும், இந்த நிவாரணத் தொகை வழங்கும் நடவடிக்கையில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாரபட்சமாக செயற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக பதாதைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி நிவாரணத் தொகை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



























