இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்தா உள்ளிட்ட பல அதிகாரிகளை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஆலோசனை
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின்போது கையெழுத்தான இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்தப் பயணத்தில் ஆய்வு நடைபெறும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். Rajnath Singh Sri Lanka visit காரணமாக கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் பல்வேறு இடங்களுக்கு செல்லும் நேரங்களில், கொழும்பின் முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.





























