திருமணம் ஆகாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், ஒருவரின் அடையாளத்தை திருமணம் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறினார். தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரின் உரிமை என்றும் திவ்யா ஸ்பந்தனா குறிப்பிட்டார்.
திருமணத்துக்கு நேரமும் அர்ப்பணிப்பும் தேவை
நல்ல நண்பர்களாக இருந்து, ஒரே மாதிரியான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் இருவர் திருமணம் செய்துகொள்வது நல்ல முடிவாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தனது கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார்.
“எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை” என்று கூறிய திவ்யா ஸ்பந்தனா, தற்போது அத்தகைய நபரைத் தேடுவதில் கவனம் செலுத்தவில்லை என்றும் தெரிவித்தார். தனது பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், ஒரு உறவைப் பேணுவதற்கு நேரமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமான அவர், ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். Divya Spandana marriage views அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.





























