தமிழ்நாட்டின் ஐந்திணை நிலங்களான காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலை, சமவெளி, வறண்ட நிலப்பகுதி மற்றும் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதுவரை பரவலாகக் காணப்படாத கோணங்களில் அரிய விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை நான்கு ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கையைப் பாதுகாக்கும் காட்சி முயற்சி
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட், நேச்சர் இன்ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஒத்துழைப்புடன் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, எதிர்காலத் தலைமுறையினரிடம் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இதை இயக்கியுள்ளார். நடிகர் அரவிந்த் சுவாமி வர்ணனை வழங்கியுள்ள நிலையில், மூன்று முறை கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் பின்னணி இசையை அமைத்துள்ளார். நாடு முழுவதும் குறைந்தது 30 திரையரங்குகளில் நேற்று முதல் Wild Tamil Nadu documentary திரையிடப்படுகிறது.
இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் ஆர்வமாக இருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் ஆரத்தி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


























