2026ஆம் ஆண்டுக்கான இந்த உதவித்தொகை 0.8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வயதைப் பொறுத்து வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.
6 முதல் 10 வயது வரையான குழந்தைக்கு 426 யூரோவும், 11 முதல் 14 வயது வரையான குழந்தைக்கு 450 யூரோவும், 15 முதல் 18 வயது வரையான குழந்தைக்கு 466 யூரோவும் வழங்கப்படவுள்ளது. வருமான நிபந்தனைகளின் அடிப்படையில் சுமார் 30 இலட்சம் குடும்பங்கள் இந்த உதவியைப் பெறுகின்றன.
லா ரெயூனியன் மற்றும் மயோட்டில் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பெருநிலப் பிரான்ஸ், குவாதலூப், கயானா மற்றும் மார்டினிக்கில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், பள்ளித் தொடக்க உதவித்தொகையை பெற்றோர் வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு ஆண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு புள்ளிவிவர ஆதாரம் இல்லை என Caf தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு 2,000 குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, உதவித்தொகை பெறும் குடும்பங்களில் 98 சதவீதத்தினர் பள்ளிப் பொருட்களை வாங்குகின்றனர். ஒரு குழந்தைக்கான பள்ளிப் பொருட்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 146 யூரோ செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 96 சதவீத குடும்பங்கள் குழந்தைகளுக்கான ஆடைகளுக்கும், 81 சதவீதம் பள்ளிக் காப்புறுதிக்கும், 79 சதவீதம் விளையாட்டு உபகரணங்களுக்கும், 69 சதவீதம் பள்ளி உணவுக்கும் செலவிடுகின்றனர்.
ஒரு குழந்தையின் கல்விக்காக இந்தக் குடும்பங்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,315 யூரோ செலவிடுவதாக Caf கூறுகிறது. ஆனால் அதிகபட்ச ARS உதவி 466 யூரோ மட்டுமே என்பதால், குழந்தையின் வருடாந்த கல்விச் செலவில் சுமார் மூன்றில் ஒரு பகுதியையே இந்த உதவி ஈடுசெய்கிறது.
































