பிரான்ஸ் உள்துறை அதிகாரிகள் முக்கிய சாலை வழித்தடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லைக் கடப்புப் பகுதிகளில் கூடுதல் காவல்துறையினரையும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் பயணிகளின் ஆவணங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கை சியூட்டாவிற்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு நகரும் அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஸ்பெயின் அரசு சியூட்டாவிலிருந்து ஸ்பெயின் பிரதான நிலப்பரப்பிற்கோ அல்லது பிற ஷென்கன் நாடுகளுக்கோ சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் செல்ல முடியாது என்றும் கடல் மற்றும் வான்வழிப் பயணங்களிலும் கூடுதல் அடையாளச் சோதனைகள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சியூட்டா நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வெளிப்புற எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மனிதக் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்துவது மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.






























