International
இந்தத் தாக்குதல்கள் குவைத்தின் இறையாண்மையை வெளிப்படையாக மீறியதுடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று குவைத் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் சர்வதேச சட்டம், ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2817 ஆகியவற்றை கடுமையாக மீறுவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த மோதல் தீவிரமடைதல் பிராந்திய பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதுடன், பதற்றத்தைத் தணித்து மேலும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் தூதரக முயற்சிகளையும் பாதிக்கிறது என்று குவைத் தெரிவித்துள்ளது.
தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை உறுதி செய்யவும். குடிமக்கள் மற்றும் நாட்டில் வசிப்போரின் பாதுகாப்பை காக்கவும் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க குவைத்துக்கு முழு உரிமை உண்டு என்று. அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.































