இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தனர். காதல் குறித்த உணர்வுப்பூர்வமான பதிவுகளையும் வெளியிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த இருவரின் காதல் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கால பைரவா காதல் அறிவிப்பு: கவிதைபோன்ற பதிவு
கால பைரவா, காவ்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, அவரை “ஹோம்” என்று குறிப்பிட்டுள்ளார். காவ்யாவுடன் நேரம் செலவிடுவது, மலைகளுக்கு அருகில் அமர்ந்து ஓடும் நதியை ரசிப்பது போன்ற அமைதியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவருடன் பேசுவது, குளிர்கால அதிகாலையில் தனக்குப் பிடித்த காபியை குடிப்பது போன்ற உணர்வை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்களாக பெயரிட முடியாத உணர்வு, உண்மையில் வீடு சேர்ந்த உணர்வு என்பதை இப்போது புரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இருவரும் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழப்போகிறோம் என்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த காவ்யா, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார். “என்னுடைய மஞ்சள் நிற பூவை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். சிலர் நம் வாழ்க்கைக்குள் வந்து, நாம் கடவுளின் செல்லப்பிள்ளை என்ற உணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும் காவ்யா கூறியுள்ளார்.
தனது சாதாரண நாட்களையும் வெளிச்சமாக மாற்றி, உலகிலேயே அதிர்ஷ்டசாலியான பெண்ணாக உணர வைத்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருவரின் பதிவுகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இசை மற்றும் நடிப்பில் இருவரின் பயணம்
கால பைரவா, இசையமைப்பாளர் எம். எம். கீரவாணியின் மகன். பாகுபலி 2, அரவிந்த சமேத வீரராகவ உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் ராகுல் சிப்ளிகஞ்சுடன் இணைந்து பாடிய நாட்டு நாட்டு பாடல் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் பாடல் ஆஸ்கார் விருது பெற்றதைத் தொடர்ந்து அவரது சர்வதேச புகழ் அதிகரித்தது.
காவ்யா கல்யாண்ராம் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 2023ஆம் ஆண்டு வெளியான பகாலம் திரைப்படம் கதாநாயகியாக அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கால பைரவா காதல் அறிவிப்பு மூலம் இருவரும் தங்கள் உறவை ரசிகர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.































