அதன் தாக்கத்தில் தூக்கி எறியப்பட்ட நபர் எதிர்திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வேகமாக வந்த கார் மீது விழுந்து,அந்த வாகனமும் அவரை மோதியதால் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புளியங்குளத்தில் சோக விபத்து ஒருவர் பலி
வவுனியா – புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துச் சென்ற சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் இரு வாகனங்கள் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (07) இரவு சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியாவில் இருந்து அதிவேகமாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹயஸ் ரக வாகனம் முதலில் பாதசாரியை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.































