இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய வீதியின் உடவளவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கார் ஒன்று பேருந்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் படல்கும்புர, மூனகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

இதனிடையே, பாணந்துறை – களுத்துறை வீதியின் களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் ஒருவர் உயிரிழந்தார். 

வேன் ஒன்றும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

உயிரிழந்தவர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading