இலங்கையில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்ற 3 டீலர்களுக்கு அபராதம்
இலங்கை மோட்டார் சைக்கிள் விலை தொடர்பான விதிமுறைகளை மீறிய மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெட்டிபொல பகுதியில் இயங்கி வந்த மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று விற்பனையாளர்களும் விற்பனை நிலையங்களில் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை முறையாக காட்சிப்படுத்தத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் இரண்டு விற்பனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நிர்ணயித்த […]
