Tag: Conservation
Bamboo Bio Fence, இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் மனிதர் யானை மோதலைக் குறைக்கும் நிலையான தீர்வாக மூங்கில் உயிரியல் வேலி அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையம் (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது […]
நாடளாவிய ரீதியில் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 1,000 தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும் அதனுடன் இணைந்த தொல்பொருள் இருவாரமும் ஜூலை 7 முதல் ஆரம்பமாகவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பாரம்பரியத்திற்கு புத்துயிர்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக நாடு முழுவதும் இனங்காணப்பட்டுள்ள 100 தொல்பொருள் தளங்களில் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சு புதிய WhatsApp புகார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சுற்றுச்சூழல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை நேரடியாக அமைச்சுக்கு அனுப்ப பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ”A Sustainable Biosphere, An Evergreen Life” என்ற நோக்கத்தின் கீழ் அறிமுகமான இந்த சேவையின் மூலம் சட்டவிரோத சுற்றுச்சூழல் அழிப்பு, குப்பை கொட்டுதல், மரவெட்டல், இயற்கை வளங்களுக்கு ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட புகார்களை புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் WhatsApp […]
ஒக்கம்பிட்டிய பகுதியில் காட்டு யானைக்குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.வனவிலங்கு திணைக்களத்தின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி விவசாய நிலம் ஒன்றை பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பி வேலியைத் தொட்டதன் காரணமாக இந்த யானைக்குட்டி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த யானைக்குட்டியின் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்தும் […]