நெல் கொள்வனவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி
அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை வெளிப்படையாகவும் திறம்படவும் மேற்கொள்வதுடன் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து அமைச்சர் கே. டி. லால் காந்த தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற கமத்தொழில் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது வியாபாரிகள் விவசாயிகள் என்ற பெயரில் அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் […]
