சித்திரவதை தடுப்பில் இலங்கைக்கு பாராட்டு
சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித தடையுமின்றி களவிஜயங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியதையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழு (SPT) பாராட்டியுள்ளதாக வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் […]
