பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை
அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய உடலியல் சிகிச்சை நிபுணர் ஷம்யா தர்ஷனியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் இன்று (09) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றிலிருந்து மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை மரண பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் […]
