கொழும்பில் சட்டவிரோத இணைய மோசடி குழு – வெளிநாட்டவர்கள் 30 பேர் அதிரடி கைது
கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்து இணையதளம் மூலம் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி இந்த மோசடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கல்கிசை குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், குறித்த கட்டிடம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 சீன நாட்டவர்கள் மற்றும் 9 வியட்நாம் நாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் […]
