கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்து இணையதளம் மூலம் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி இந்த மோசடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கல்கிசை குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், குறித்த கட்டிடம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 சீன நாட்டவர்கள் மற்றும் 9 வியட்நாம் நாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இணையதளம் ஊடாக பல்வேறு நிதி மோசடி வலைப்பின்னல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் இவர்களின் மோசடி நடவடிக்கைகளின் முழு வலைப்பின்னலை கண்டறிய பொலிஸார் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading