இலங்கையில் டெங்கு 35 உயிரிழப்புகள் பதிவு
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 1,253 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது நோய் பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. மாவட்ட வாரியான புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்தில் 11,811 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 11,443 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டு மாவட்டங்களிலேயே அதிகளவிலான […]
