சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 1,253 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது நோய் பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

மாவட்ட வாரியான புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்தில் 11,811 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 11,443 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டு மாவட்டங்களிலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் மேல் மாகாணத்தில் மட்டும் 23,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அழித்து சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்