சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கொழும்பு–கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி இன்று (03) அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்து கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்