இணையவழி ஊடாக தொழில் செய்து அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மொத்தமாக 43 இலட்சத்து 86 ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்துள்ளதுடன் அதில் இருந்து 5 இலட்சம் ரூபாயை முறைகேடாக தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.









Leave a Reply