சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி அவர் மற்றொருவருடன் இணைந்து வயல்வெளிக்குச் சென்றிருந்தபோது திடீரென காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்