சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி அவர் மற்றொருவருடன் இணைந்து வயல்வெளிக்குச் சென்றிருந்தபோது திடீரென காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








Leave a Reply