Spain News, ஸ்பெயின் அரசு ஆவணங்களின்றி (Undocumented) வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்களுக்காக அறிமுகப்படுத்திய விசேட குடியிருப்பு சட்டப்பூர்வப்படுத்தல் (Regularization) திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு காலம் ஜூன் 30, 2026 அன்று நிறைவடைந்துள்ளது.
அரசு ஆரம்பத்தில் சுமார் 5 இலட்சம் பேருக்கு இந்தத் திட்டம் பயன்பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின்படி மொத்த விண்ணப்பங்கள் 11.7 இலட்சத்தைத் தாண்டியுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் சுமார் 609,000 பேருக்கு விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் காலத்திலேயே தற்காலிக வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஸ்பெயினில் சட்டபூர்வமாக வேலை செய்ய முடியும்.
இந்தத் திட்டத்திற்கு தகுதி பெற, 2025 டிசம்பர் 31க்கு முன்னர் குறைந்தது ஐந்து மாதங்கள் ஸ்பெயினில் வசித்திருக்க வேண்டும். மேலும், குற்றப் பதிவு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சர்வதேச பாதுகாப்பு கோரி இருந்திருக்க வேண்டும். Spain News
இப்போது ஸ்பெயின் குடியேற்ற அதிகாரிகளுக்கு அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து முடிவு வழங்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் ஏற்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு காலம் செல்லுபடியாகும் குடியிருப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும்.









Leave a Reply