நேர்மையான வாழ்க்கை – புதிய குடியேற்ற (immigration) சட்ட மாற்றம்.
ஸ்வீடன் அரசு புதிய குடியேற்ற (immigration) சட்ட மாற்றத்தை முன்மொழிந்து, “நேர்மையான வாழ்க்கை” (Honest Living Rule) என்ற விதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் சட்டங்களை மதிக்காமல் வாழும் அல்லது அரசின் விதிமுறைகளை மீறும் குடியேறிகளின் குடியிருப்பு அனுமதி (residence permit) ரத்து செய்யப்பட்டு அவர்கள் நாடுகடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டு பதவியேற்ற வலதுசாரி அரசின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த “நேர்மையான வாழ்க்கை” விதியின் படி அரசு விதிகளை பின்பற்றாமல் கடன் செலுத்தாமல் தவிர்ப்பது, வரி மோசடி செய்வது, அரசு நலன்களை (welfare benefits) மோசடி செய்து பெறுவது, அபராதங்களை செலுத்தாமல் தவிர்ப்பது போன்ற செயல்கள் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ய காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தவறான தகவல்களை வழங்கி குடியிருப்பு அனுமதி பெற்றிருந்தால் கூட அது ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்வீடன் அரசு கூறுவதாவது, நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் அல்லது தீவிரவாத தொடர்புகள் உள்ளதாக சந்தேகிக்கப்படுவோருக்கும் இந்த விதி பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் குடியேற்றக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் 2026 முதல் தன்னார்வமாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பும் குடியேறிகளுக்கு பொருளாதார உதவி வழங்கும் திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பதே நோக்கமாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஸ்வீடனில் குடியேற்ற விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய சட்டம் தொடர்பாக சிலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சிலர் இது மிகவும் பொது மற்றும் தெளிவற்ற விதியாக இருக்கலாம் என்றும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.





Leave a Reply