Sweden Immigration
ஸ்வீடன் அரசு கடந்த சில மாதங்களாக கடும் விமர்சனத்துக்குள்ளான இளம் குடியேற்றவாசிகள் தொடர்பான நாடுகடத்தல் விதிகளில் முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதுவரை 18 வயதை அடைந்த பிறகு, பெற்றோர் ஸ்வீடனில் சட்டபூர்வமாக தங்க அனுமதி பெற்றிருந்தாலும் சில இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் குடியிருப்பு அனுமதிக்குத் தகுதி இல்லை என்ற காரணத்தால் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடைமுறைகள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
புதிய மாற்றங்களின் கீழ் குடியேற்றச் சட்டத்தில் வயது வந்தவர் என கருதப்படும் வரம்பு 18 இலிருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் 21 வயது வரை இளைஞர்கள் தங்களது பெற்றோரின் குடும்ப இணைப்பு அடிப்படையில் ஸ்வீடனில் தொடர்ந்தும் தங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் நாடுகடத்தல் உத்தரவு பெற்றிருந்தும் இன்னும் நாட்டை விட்டு செல்லாதவர்கள் புதிய குடியிருப்பு அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே வெளியேறியவர்களுக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
ஸ்வீடன் குடியேற்ற அமைச்சர் Johan Forssell இந்த மாற்றங்கள் கல்வி கற்று வேலை செய்து வரும் இளைஞர்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டின் மொத்த குடியேற்றக் கொள்கை தொடர்ந்து கடுமையாகவே இருக்கும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. Sweden Immigration





Leave a Reply