Migrant Workers
இத்தாலியின் தெற்குப் பகுதியான கலாப்ரியா (Calabria) பிராந்தியத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு வாகனத்திற்குள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Amendolara பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் அருகே எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்திற்குள் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
விசாரணையில் இரண்டு பேர் வாகனத்தின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டி எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்ததாக கண்காணிப்பு காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களை இத்தாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின் படி வேலைவாய்ப்பு பகிர்வு குடியிருப்பு அனுமதி (Residence Permit) மற்றும் தங்குமிடம் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இதே பகுதியில் பாகிஸ்தான் தொழிலாளர்களின் வாகனங்களை இலக்காகக் கொண்ட பல தீவைப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. Migrant Workers
இந்தச் சம்பவம் இத்தாலியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.













Leave a Reply