ரன்பீர் கபூர் சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ராமாயணம் திரைப்படத்தின் டிரெய்லர் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு VFX தரம் மற்றும் நடிகர்களின் தோற்றம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் நிதேஷ் திவாரி சமீபத்திய நிகழ்வில் பேசியபோத ரன்பீர் கபூரையும் சாய் பல்லவியையும் முதலில் தேர்வு செய்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரு நடிகரின் கண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது. ரன்பீரின் கண்களில் நான் ஸ்ரீ ராமரைப் பார்த்தேன். சாய் பல்லவியின் கண்களில் சீதையின் தூய்மையையும் உண்மையையும் கண்டேன். அதனால்தான் இந்த இருவரும் ஆரம்பத்திலிருந்தே என் முதல் தேர்வாக இருந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சாய் பல்லவியின் இயல்பான தோற்றமும் ரன்பீர் கபூரின் அமைதியான நடிப்பும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவை என பலரும் பாராட்டி வருகின்றனர்.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் இராவணனாகவும் நடித்துள்ளனர். முதல் பாகம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













Leave a Reply